நீரைப் பருகத் தரமுடியவில்லை எனில் எனக்குத் தாகத்தைத் தராதே.
உணவைத் தரமுடியவில்லை எனக்குப் பசியைத் தராதே.
நல்ல பணிகளுக்குப் பயன்படுத்தமுடியவில்லை எனில் எனக்குத் திறமைகளைத் தராதே.
அறிவைக் கடந்து என் பார்வையைச் செலுத்த முடியவில்லை எனில் எனக்கு நுண்ணறிவைத் தராதே.
உள்வாங்கி ஜீரணிக்க முடியவில்லை எனில் எனக்கு அறிவைத் தராதே.
சேவை செய்ய முடியவில்லை எனில் எனக்கு அன்பைத் தராதே.
உன்னை அடைய வழி வகுக்கவில்லை எனில் எனக்கு ஆசையைத் தராதே.
இல்லத்திற்கு அழைத்துச் செல்லவில்லை எனில் எனக்கு வழியைத் தராதே.



0 கருத்துகள்