தகவல்கள் பரிமாறவில்லை
எப்படி வந்தது அவளுக்கு
ஒரே மாதிரியான எண்ணங்கள்
மனதில் தோன்றும் எண்ணங்கள்
பிரதிபலிப்பின் மறு வடிவம்
கண்களில் எழும் சந்தோஷம்
அப்படி என்ன மகிழ்ச்சி
இருந்தும் வெளிய காட்டாமல்
எப்படி வாழ்ந்தால் இத்தனை
நாட்கள் மௌனமா இல்லை
அமைதியா அழகுடைய பெண்டிர்
நடப்பதில் தான் சுகங் கண்டாளோ
இத்தனை பெரு மூச்சு விடும் அளவிற்கு
நிம்மதியாக வாழ்ந்தாலும்
உன்னை கண்டேன் எதற்கு பரிதாபம்
பார்ப்பதற்கே பட்டினியான உடல்
ஊன் உணவு பாதுகாப்பு
அனைத்திலும் அவளுக்கு அக்கரையாம்
எத்தனை நிமிடங்கள் அவளால
பார்க்கமுடியும் நினைப்பதி
பார்ப்பதில் என்ன பார்ப்பதில்
உன்னை நினைப்பதே
சுகந்தான்
வருந்தி வாழ்ந்தாளாம்
அவன் கிடைக்க மாட்டான் என்று
இன்றும் வருந்திகிறாளாம்
அவன் பேசமாட்டானா என்று
பார்க்காத கண்ணும்
பேசாத உதடும்
இருந்து என்ன பயன்
நான் அவனருகே இருப்பவர்களிடம்
பேசுவேன் அவனும்
அதை செய்கையே அவனும்
செய்தால் இருவரிடமும்
உள்ளதா காதல்
பசித்திடும் நேரத்தில் என்னை
நோக்கும் அவனுக்கு
என்ன வேண்டும் விரும்பினால்
ஒன்று கொடுப்பேன்
அவன் என் கண்ணீரை
வரவைப்பதன் ரகசியம்
நான் இருக்கும் அவனுக்கு
ஒரு தலை காதல் தேடல் அவசியமா
பார்த்தவுடன் பிடிக்காது பழக வேண்டும் என்று சொல்லுபவனுக்கு அவனுக்கு
தெரியாதா பெண்கள் வெட்கபடுவார்கள்
என்று தெரிந்தும் கண்களின் பார்வை
இழப்பதை போன்ற எண்ணம்
மாற்றினான் பெயரை ஏமாந்து
போனேன் மாற்றினான் ஏமாந்து
நேரத்தை வீணடிக்க வீணாக்க
தெரியாதவன் அதனால் என்னவோ தெரியவில்லை
ஆடி பெருக்கில் தொடங்கிய வேலை
இன்றும் இடை நிறுத்தமில்லை
தொடர்ந்து செல்கிறான் வேலைக்கு ........



0 கருத்துகள்