உன்னை காணாத நாட்களில்

 தினமும் 

யார் முகத்தை பார்த்தாலும்

ஏமாந்து போகிறேன் 

அவள் முகமென்று

அவளை பார்த்தாலும் 

சற்றே

யோசிக்கிறேன் அவளா

என்று 

கூறுவேன் என்று சொன்னவறள்

ஏதேனும் குறை கண்டாளா?

காதலிக்க நேரமில்லையா ?

பிரிந்தால் புரியும் 

என்னை விட்டு 

பிரியும் போது புரியும்

நான் யாரென்று தெரியும் 

கண்ணாடிகளில் பிம்பமாய் 

தேடும் உனக்கு என்

பிம்பம்

கிடைப்பது தலைகீழ் பிம்பம் தான்

உன் மௌனத்தின் மாற்றம் 

தெரியுமா?இல்லையா?

எனக்கென ஏமாற்றமா ?

சுவாசங்களில் மணக்கும்படி

என்னை உரசி செல்லும்

உன்னிடம் 

வாசம் செய்வது காதலா காமமா

சிவக்கும் மருதாணியில்

உணர்வது காதலா காமமா

எல்லையற்ற துன்பத்தையும் 

எண்ணற்ற தேகத்தையும் 

உணருகிறேன் 

உன்னை 

காணாத நாட்களில்





கருத்துரையிடுக

0 கருத்துகள்